வீடியோ ஸ்டோரி

”அனைத்து மக்களும் வேறுபாடு பார்க்காமல் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும்”

By VASUKI
29 Jan 2025, 06:17 AM
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர், வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் .டி.கே.சிவக்குமார், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கர்நாடக சட்டமன்ற பேரவைத் தலைவர் U.T.காதர் ஃபரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.