விளையாட்டு

"இந்தியா தோற்றது ஆச்சரியமில்லை!" - அம்பத்தி ராயுடுவின் அதிரடி கருத்து

By Sumalekha
29 Jun 2026, 09:05 PM
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அயர்லாந்து ஆடுகளங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி போதுமான தயாரிப்பை மேற்கொள்ளவில்லை. ரன்கள் குவிக்க ஏற்ற பேட்டிங் ஆடுகளங்களில் தொடர்ந்து விளையாடிவிட்டு, திடீரென சவாலான ஆடுகளங்களில் விளையாடுவது எளிதான விஷயம் அல்ல.

இந்திய அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் சேர்க்கும் பாணியில் விளையாடுபவர்கள். அதனால் அயர்லாந்தின் மந்தமான மற்றும் சவாலான ஆடுகளங்கள் அவர்களுக்கு கடினமாக இருந்திருக்கலாம்.

மேலும், திலக் வர்மா மெதுவான பந்துகளை எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சரியான கால் அசைவுகளுடன் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மெதுவான ஆடுகளங்களில் விளையாடும் அனுபவத்தை அதிகரித்துக்கொள்வது அவரது வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்" என்று ராயுடு தெரிவித்துள்ளார்.