அரசியல்

"உதய் பேசியது தவறு; அதனால்தான் கைது!" - விஷால் பரபரப்பு பேட்டி!

By Sumalekha
06 Aug 2026, 08:00 PM
குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
குமுதம் டிஜிட்டல் பிரிவுக்கு நேர்காணல் தந்த நடிகர், இயக்குநர் விஷால், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகையை இணைத்து ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது தொடர்பாக பேசிய விஷால், ”சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். அரசியலில் சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக சில வார்த்தைகள் பேச வேண்டியிருக்கும்.

எதிர்க்கட்சியாக இருந்து ஆளும் தரப்பை விமர்சித்தால் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியது இயல்புதான். அதேபோல் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இதே நிலை பொருந்தும். இதுதான் அரசியல். உதயா பேசுனது தப்பு, அதனால தான் போலீஸ் கைது பண்ணாங்க.. அப்றம் அவரு வெளில வந்துட்டாரு. சரி நானே இப்ப பேசுறது வந்து பல விஷயம் கான்ட்ரவர்சியலா நிறைய பேருக்கு அது பார்க்கும்போதோ கேட்கும்போதோ தெரியும்.

அதனால் ஒரு லயோலா காலேஜ் சீனியர் வந்து என்ன எங்க என்னோட பேட்ச் மேட்ட வந்து ஜெயிலுக்கு தள்றது வந்து நாங்க லயோலோ காலேஜ்ல படிக்கும் போது எல்லாம் நம்ம கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்ல” என்று கூறினார்.

விஷாலின் முழு நேர்காணலை காண: https://www.youtube.com/watch?v=BDo5pW1oamc&t=386s