K U M U D A M   N E W S

Author : Janani

#BREAKING | ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

போலி பட்டா விவகாரம் - மதுரை ஆட்சியர் அஜராகி விளக்கம்

மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல். போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்

#BREAKING | எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா?

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

#BREAKING || போலி பட்டா - மதுரை ஆட்சியர் விளக்கம்

போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜராகி விளக்கம்

#BREAKING || நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல்

சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா

அவதூறு கிளப்பிய அமைச்சர் சுரேகா மீது நம்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா.

#JUSTIN: அவதூறு பேச்சு.. அமைச்சருக்கு எதிராக நாகார்ஜூனா வழக்கு

நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா, நம்பள்ளி நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேகா மீது அவதூறு வழக்கு.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

#JUSTIN || ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆட்சியரிடம் வழங்க வந்த மக்கள்

"சிறையில் சாதி? - மாநில அரசே பொறுப்பு"

சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

#BREAKING: திடீரென சரிந்த மேடை.. கீழே விழுந்த பிரியங்கா மோகன்

தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து. ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காக சென்றிருந்த போது பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த மேடை சரிந்தது

#BREAKING: மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது வழக்குப்பதிவு

மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார், முத்துச்சாமி, முத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு. மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை துணை மேயர் உட்பட 5 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு

லட்டு சர்ச்சை: ’அறிக்கையை வெளியிடாதது ஏன்?’ நீதிமன்றம் கேட்ட கேள்வி!

திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

#JUSTIN: ஆற்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

#BREAKING: Tirupati Laddu Issue: லட்டு விவகாரம் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

#BREAKING || தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல்?

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக 8ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்

#BREAKING || ஊதியம் வழங்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது

”மாநில அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்குக” கடுமையாக சாடிய இபிஎஸ்

மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் நிகழ்ந்த மாயம்.. - ஒரே நொடியில் எமனை கண்ணால் கண்ட 12 பேர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 12 பேர் மயக்கம்

#BREAKING : இலங்கை புதிய அதிபரை சந்திக்கும் ஜெய்சங்கர்

அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#Justin || பாதுகாப்பு உபகரணமின்றி சுத்தம் செய்யும் பணி - பகீர் வீடியோ

சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் உள்ள கால்வாயை சுத்தம் செய்யும் பணி. கழிவுநீர் கால்வாயை எந்தவொரு பாதுகாப்பு உபகரணமின்று சுத்தம் செய்யும் அவலநிலை