தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநில செயற்குழு கூட்டம், மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய சிஐடியு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில செயலாளர் ராஜேந்திரன், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிடாமல் உள்ளது. ஆரம்பக் கட்ட பணியில் 32 ஆயிரம் காலி பணியிடங்களும், ஒட்டுமொத்தமாக 62 ஆயிரம் காலி பணியிடங்களும் உள்ளது. அதுமட்டுமின்றி வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டும்" என்றார்.
மேலும், "ஒரு பக்கம் தமிழ்நாட்டில் மின் இணைப்புகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது நிலவரப்படி 3 கோடியே 38 லட்சம் மின் இணைப்புகள் உள்ளது. இதையெல்லாம் பராமரிப்பதற்காக கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 560 நபர்கள் பணியாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் நிதிநிலை காரணம் காட்டி பணியாளர்கள் எடுக்காமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், "நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விரைவில் காலி பணியாளர் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது. அரசு டிஎன்பிசி மூலமாக 215 உதவி பொறியாளர் மட்டும் தற்போது பணி நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. தடையில்லா மின்சாரம், தரமான மின்சாரம் என கோஷங்களை மின்னெடுக்கும் தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை.
பணிச் சுமை காரணமாக பணியாற்றும் ஊழியர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால், தமிழ்நாடு அரசு உடனடியாக மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 10 முதல் 15 ஆண்டு காலம் வரை தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த மின் ஊழியர்களை கணக்கெடுப்பு செய்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது தனியார் மயமாக்கலின் ஒரு பகுதி. இதனை சிஐடியு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மின்சார வாரியம் என்பது டெண்டர் முறையில் அறிவித்து, தனியார் நிறுவனமே ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி பராமரிப்பு செய்து, மாதம்தோறும் கட்டணம் வசூல் செய்யும். அதுமட்டுமின்றி நேரத்திற்கு தகுந்தார் போல் கட்டணம் வசூலிக்கும் முறையும் வரும் என்பதால் இது தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சிறு குறு தொழிலை பாதிக்கும். எனவே ஸ்மார்ட் மீட்டரை மின்வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் தமிழகத்தில் உள்ள 89 லட்சம் 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தக்கூடிய பயனாளிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமின்றி விவசாயம், நெசவுத்தொழில் போன்றவற்றுக்கு இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்படாது. மத்திய அரசு நிர்பந்தப்படுத்துவதால் தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துகிறது. மேற்கு வங்கம் மட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்க்கிறது" என்றார்.
மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு சொல்லக் கூடிய காரணம் நிதி பற்றாக்குறை. அதிக விலைக்கி மின்சாரம் வாங்குவது இதற்கு முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்திற்கு நிகராக செலுத்துகிறது. அதனால், அரசு தன்னுடைய மின் உற்பத்தி திட்டங்களை போர்க்கால அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மின்வாரியம் லாபத்தை நோக்கி நகரும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மாநில மாநாடு கடலூரில் வரும் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டில் மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும், காலி பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில செயலாளர் ராஜேந்திரன், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிடாமல் உள்ளது. ஆரம்பக் கட்ட பணியில் 32 ஆயிரம் காலி பணியிடங்களும், ஒட்டுமொத்தமாக 62 ஆயிரம் காலி பணியிடங்களும் உள்ளது. அதுமட்டுமின்றி வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டும்" என்றார்.
மேலும், "ஒரு பக்கம் தமிழ்நாட்டில் மின் இணைப்புகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது நிலவரப்படி 3 கோடியே 38 லட்சம் மின் இணைப்புகள் உள்ளது. இதையெல்லாம் பராமரிப்பதற்காக கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 560 நபர்கள் பணியாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் நிதிநிலை காரணம் காட்டி பணியாளர்கள் எடுக்காமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், "நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விரைவில் காலி பணியாளர் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது. அரசு டிஎன்பிசி மூலமாக 215 உதவி பொறியாளர் மட்டும் தற்போது பணி நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. தடையில்லா மின்சாரம், தரமான மின்சாரம் என கோஷங்களை மின்னெடுக்கும் தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை.
பணிச் சுமை காரணமாக பணியாற்றும் ஊழியர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால், தமிழ்நாடு அரசு உடனடியாக மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 10 முதல் 15 ஆண்டு காலம் வரை தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த மின் ஊழியர்களை கணக்கெடுப்பு செய்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது தனியார் மயமாக்கலின் ஒரு பகுதி. இதனை சிஐடியு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மின்சார வாரியம் என்பது டெண்டர் முறையில் அறிவித்து, தனியார் நிறுவனமே ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி பராமரிப்பு செய்து, மாதம்தோறும் கட்டணம் வசூல் செய்யும். அதுமட்டுமின்றி நேரத்திற்கு தகுந்தார் போல் கட்டணம் வசூலிக்கும் முறையும் வரும் என்பதால் இது தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சிறு குறு தொழிலை பாதிக்கும். எனவே ஸ்மார்ட் மீட்டரை மின்வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் தமிழகத்தில் உள்ள 89 லட்சம் 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தக்கூடிய பயனாளிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமின்றி விவசாயம், நெசவுத்தொழில் போன்றவற்றுக்கு இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்படாது. மத்திய அரசு நிர்பந்தப்படுத்துவதால் தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துகிறது. மேற்கு வங்கம் மட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்க்கிறது" என்றார்.
மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு சொல்லக் கூடிய காரணம் நிதி பற்றாக்குறை. அதிக விலைக்கி மின்சாரம் வாங்குவது இதற்கு முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்திற்கு நிகராக செலுத்துகிறது. அதனால், அரசு தன்னுடைய மின் உற்பத்தி திட்டங்களை போர்க்கால அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மின்வாரியம் லாபத்தை நோக்கி நகரும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மாநில மாநாடு கடலூரில் வரும் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டில் மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும், காலி பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.