K U M U D A M   N E W S
Promotional Banner

உலகம்

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிரஷென்னிகோவ் எரிமலை வெடிப்பு.. நிலநடுக்கத்துக்குப் பின் அதிர்ச்சி!

ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை.. நிலநடுக்கம் காரணமா?

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.

டிரம்பின் புதிய வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்படுமா?

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே நாளில் 106 பேர் பலி!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காசா: உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 2 பேர் பலி, 70 பேர் காயம்!

காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதுக்குட்டபட்ட சிறார்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் TikTok, Instagram, Facebook, X, Snapchat போன்ற சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று கணக்கு தொடங்கி பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் யூடியூப் தளமும் இணைந்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

புவி கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!

சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய டாக்டர்.. பிரிட்டனில் அதிர்ச்சி!

டாக்டர் ஒருவர் ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களை பணியமர்த்த ட்ரம்ப் கடும் எதிர்ப்பு. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவு!

ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும், இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள்...கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள்

உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்