K U M U D A M   N E W S

உலகம்

'கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி..' இலங்கை அதிபர் திட்டவட்டம்!

தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிரம்ப் இந்தியப் பயணம் ரத்து: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மறுப்பு – வர்த்தகத் தகராறு காரணமா?

இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் செல்போன்.. ஜப்பானில் புதிய கட்டுப்பாடு!

மக்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்ஃபோனை பயன்படுத்த வேண்டும் என டோக்கியோ மேயர் அறிவித்துள்ளார்.

செல்பி மரணங்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

செல்பி எடுப்பதற்கு மிக ஆபத்தான நாடிகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு நாளை முதல் 50% வரி- அமெரிக்கா நோட்டீஸ்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரிவிதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம்.. பிரசவ வார்டில் கையும் களவுமாக சிக்கிய கணவர்!

சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசு நிதியில் சொந்த பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

டிரேக் கடலில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

சிலியின் தெற்கு முனைகள் மற்றும் அண்டை நாடான அர்ஜெண்டினாவுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Judge Frank Caprio: ‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ பிராங்க் காப்ரியோ மறைவு…இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலமானவர்

கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ 88 வயதில் காலமானார்

பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற குழந்தை.. தாய் கைது!

அமெரிக்காவில் தனது குழந்தையின் புத்தகப் பையில் துப்பாக்கியை வைத்து பள்ளிக்கு அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: டிரம்ப்பை கைகுலுக்கி வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

"போரை முடிவுக்கு கொண்டுவர நேர்மையான முயற்சி"- டிரம்பை பாராட்டிய புதின்

கிரெம்ளினில் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்

சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.