K U M U D A M   N E W S
Promotional Banner

உலகம்

பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்த மக்கள்!

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காப்பர், மருந்து பொருட்கள் மீது வரிவிதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையம்.. 13ம் தேதி பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா!

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி மரியாதை!

அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்க நாடான கானாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரலாற்றுச் சுற்றுப்பயணத்தின் நினைவாக கானா அரசு அவருக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான “Order of the Star of Ghana” விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!

ஆஸ்திரேலியாவில் வௌவால் கடித்ததில் ரேபிஸ் போன்ற அபூர்வ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

ட்ரம்பின் முடிவால் USAID நிதி நிறுத்தம்: 1.4 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!

சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவா? நிஜமா?.. 6 மாதங்களாக வயிற்றுக்குள் கரண்டியுடன் வாழ்ந்த நபர்..!

சீனாவில் யான் என்ற நபர் மதுபோதையில் 15 செ.மீ நீளமுள்ள கரண்டியை விழுங்கியுள்ளார். 6 மாதங்களாக அது ஒரு கனவு என நினைத்து வந்த நிலையில், வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்றதால் உண்மை தெரிந்துள்ளது.

சுபான்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால்பதித்த முதல் இந்தியர்!

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம், ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் ஃபால்கான்-9 ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது.

நியூயார்க் மேயர் தேர்தல்.. இந்திய வம்சாவளி வேட்பாளரை கடுமையாக சாடிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முடிவுக்கு வந்த இஸ்ரேல்-ஈரான் போர்.. அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

போர் நிறுத்தம் இல்லை.. ஈரான் அரசு விளக்கம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் துயர சம்பவம்.. தேவாலயத்தில் குண்டுவெடிப்பு..!

சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.