மதுரை அம்மா திடலில் நாளை (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் கண்காட்சி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பார்வையிட்டார். பின்னர் ஆறுபடை முருகனை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் மதுரை. அறுபடை வீடுகளும் மதுரையில் அமைத்திருப்பது இதன் தனி சிறப்பாக உள்ளது. மதுரையில் முருக பக்தர் மாநாடு நடப்பது என்பது வரலாற்று சிறப்புமிக்கது.
தமிழ் கடவுளை தமிழ் பற்று உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கி தரிசிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவயும் தருகிறது. இது போன்ற மாநாடுகளுக்கு ஜாதி மதம் மொழி என்று எதுவும் கிடையாது. இதில் அரசியலும் கிடையாது.
ஆன்மிகம் என்பது மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைபடுத்துவதற்கும், ஒழுக்கப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இந்த முருகன் மாநாட்டில் பெருமையுடன் கூறுகிறேன். மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், அந்தத் தடைகளை தகர்த்தெறியக்கூடிய சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் மதுரை. அறுபடை வீடுகளும் மதுரையில் அமைத்திருப்பது இதன் தனி சிறப்பாக உள்ளது. மதுரையில் முருக பக்தர் மாநாடு நடப்பது என்பது வரலாற்று சிறப்புமிக்கது.
தமிழ் கடவுளை தமிழ் பற்று உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கி தரிசிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவயும் தருகிறது. இது போன்ற மாநாடுகளுக்கு ஜாதி மதம் மொழி என்று எதுவும் கிடையாது. இதில் அரசியலும் கிடையாது.
ஆன்மிகம் என்பது மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைபடுத்துவதற்கும், ஒழுக்கப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இந்த முருகன் மாநாட்டில் பெருமையுடன் கூறுகிறேன். மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், அந்தத் தடைகளை தகர்த்தெறியக்கூடிய சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" எனத் தெரிவித்தார்.