அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த மனு குறித்து இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ''நீதிமன்றத்திற்கு இணையானது தேர்தல் ஆணையம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நல்ல தீர்ப்பு என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்!'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.