வீடியோ ஸ்டோரி

கொத்துப் பரோட்டா இல்லையா? ஹோட்டலை புரட்டிப்போட்ட போதை ஆசாமிகள்! பகீர் CCTV காட்சிகள்

கொத்து புரோட்டா இல்லை எனக்கூறியதால், உணவகத்தை சூறையாடிய போதை ஆசாமிகள்

கொத்து புரோட்டா இல்லை என்று‌ கூறியதால் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்.

தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவில் உள்ள ஹோட்டலில் நேற்றிரவு மதுபோதையில் வந்த இளைஞர்கள் கொத்து புரோட்டா கேட்டுள்ளனர்.‌ அதற்கு ஊழியர்கள் கொத்து புரோட்டா இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையை அடித்து நொறுக்கி - கடையின்‌ ஊழியர்களையும் தாக்கி உள்ளனர். இது குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கடையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.