Minister Sekar Babu Speech About Chief Minister Stalin : முருகனும் இன்னும் பல கடவுள்களும் சேர்ந்து தான் ஸ்டாலினை முதல்வராக ஆக்கினார்கள் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, “பாஜகவினர் வேலை தூக்கி அவர்கள் கூட ஊர் ஊராக அலைந்தார்கள். முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது தலைவரை முதலமைச்சராக ஆக்கினார்கள் என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட பல்வேறு வகைகளில் ஆன்மீகத்தை கையில் எடுக்க முயற்சித்தார்கள். மீண்டும் 2024 அவர்களின் கருத்துக்களை புறக்கணித்து தமிழகம் முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்தி உள்ளனர். முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான், அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது தலைவரை முதலமைச்சராக ஆக்கினார்கள். முருகனும் இன்னும் பல கடவுள்களும் சேர்ந்து தான் ஸ்டாலினை முதல்வராக ஆக்கினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.