தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட 25 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பள்ளி கல்வித்துறையில், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தொடக்கக்கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்ப்பட்டுள்ளனர்.