வீடியோ ஸ்டோரி

எதுக்கு என்னை Photo எடுக்குற”நடத்துனரை கன்னத்தில் பளார்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் மீன் கூடையை ஏற்றும்போது நடத்துனருக்கும் அந்த பெண்மணிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நடத்துனர் அந்த பெண்ணை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதால், அந்த பெண்மணி நடத்துனரை ஓங்கி கன்னத்தில் அறைந்ததாகவும், இந்த சம்பவத்தால் பேருந்தில் கடுமையான நடத்துனர் பரமசிவம் ஓட்டுனர் மணிவண்ணன் மற்றும் அந்த பெண்மணிக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த பேருந்தில் இருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் வேறு பேருந்துக்கு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.