ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது.
இந்த நிலையில், இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து டிரம்பின் முன்மொழிவை ஏற்பதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை வெற்றிகரமாக அழித்துவிட்டோம் என கூறியுள்ள அவர், ஆபரேசன் ரைசிங் லைன் திட்டத்தில் இலக்குகள் நிறைவேறிவிட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடந்தன. அமெரிக்காவின் நடுநிலை தூதுவிதானத்தால் இரு நாடுகளும் ஓர் புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. தற்போது, இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போரை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் மற்றும் உள்நாட்டு நலன்களை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுடன் ஏற்பட்ட தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும், எதிர்வரும் நாட்களில் இருநாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது.
இந்த நிலையில், இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து டிரம்பின் முன்மொழிவை ஏற்பதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை வெற்றிகரமாக அழித்துவிட்டோம் என கூறியுள்ள அவர், ஆபரேசன் ரைசிங் லைன் திட்டத்தில் இலக்குகள் நிறைவேறிவிட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடந்தன. அமெரிக்காவின் நடுநிலை தூதுவிதானத்தால் இரு நாடுகளும் ஓர் புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. தற்போது, இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போரை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் மற்றும் உள்நாட்டு நலன்களை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுடன் ஏற்பட்ட தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும், எதிர்வரும் நாட்களில் இருநாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.