அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார் பிரசாந்த் நீல்.
77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.
டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்தாதூன் படத்தின் ரீமேக்காக வெளியாகியுள்ள அந்தகன் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.
தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாகதீர்த்தம் வனக்கோயிலில் ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மகேஷ் பாபுவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.
உங்களது குடலுக்கு சரியான புரோபயாடிக் உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான குடலை பராமரிக்க சிறந்த உத்தியாகும். புரோபயாடிக் நிறைந்த உணவுகள் குறித்து கீழே பார்க்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்க்கலாம் என அறிவித்துள்ள படக்குழு, விஜய்யின் தெறி மாஸ்ஸான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
கமலின் இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளன.
தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் வேட்டையன், விடாமுயற்சி படங்களின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ரசிகர்களை உஷார்படுத்தும் விதமாக லைகா நிறுவனம் கொடுத்துள்ள அதிர்ச்சியான அப்டேட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ள நாகர்ஜூனா, திருமணம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.