K U M U D A M   N E W S

Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Adani Group Hindenburg : ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம்.. அறிக்கை வெளியிட்டு விளக்கம்!

Adani Group Denied Hindenburg Allegation : ''எங்கள் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டது. இப்போது ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள தனிநபர்களுடன் அதானி குழும நிறுவனங்கள் எந்த வணிக உறவும் வைத்துக் கொள்ளவில்லை'' என்று அதானி குழுமம் கூறியுள்ளது.

Actor Vikram : “காதல் தொடர்பான படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” - நடிகர் விக்ரம் பூரிப்பு

Actor Vikram will Act Romantic Films : ‘தங்கலான்’ படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும் மற்றும் அனைவரும் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என நடிகர் விகரம் தெரிவித்துள்ளார்.

Tamil Puthalvan Scheme : 'இதெல்லாம் ஒரு திட்டமா?'.. தமிழ் புதல்வன் திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்!

Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : ''நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

Thirumavalavan : “நடிகர் ரஞ்சித்தின் கருத்து வேதனையளிக்கிறது” - திருமாவளவன் எம்பி

Thirumavalavan about Actor Ranjith Comment on Honour Killing : ஆணவக் கொலை வன்முறை அல்ல, பெற்றோர்களின் அன்பின் வெளிபாடு என நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது வேதனை அளிப்பதாகத் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

Kieron Pollard : ப்பா.. என்னா அடி.. ரஷித்கானுக்கு மரண பயம் காட்டிய பொல்லார்ட்.. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசினார்!

Kieron Pollard Hit Record Six of Rashid Khan Bowling : ரஷித்கான் ஷாட் பிட்ச்சாக போட்ட முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசிய கிரன் பொல்லார்ட், 2வது பந்தையும் அசால்ட்டாக ஆப் சைடில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார். இதனால் மிரண்டு போன ரஷித்கான், 3வது பந்தை லைன் அண்ட் லென்த்தை மாற்றி போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு கெத்து காட்டினார் பொல்லார்ட்.

Bullock Cart Race : அரிமளம் மாட்டு வண்டி பந்தயம்; கண்களுக்கு விருந்தளித்த சீறிப்பாயும் மாடுகள்

Arimalam Bullock Cart Race in Sri Sethumel Chella Ayyanar Temple : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Durai Dayanidhi : மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!

Durai Dayanidhi Death Threats : கொலை மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் கூடுதலாக ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி விமான சேவை; பயணிகளுக்கு தமிழில் வரவேற்பு!

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து நேற்று (ஆகஸ்ட் 10) முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு விமான நிலைய தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர்.

Paris Olympics 2024 : ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவு.. பதக்க வேட்டையில் எந்த நாடு முதலிடம்?

Paris Olympics 2024 : இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. ஓலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் இரட்டை பதக்க நாயகி மனு பாக்கர் மற்றும் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்ற ஸ்ரீஜேஷ் ஆகியோர் நமது தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.

Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!

Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“இஸ்லாமிய சமுதாயத்தை பாஜக ஒதுக்குகிறது” - விஜய் வசந்த் எம்.பி. தாக்கு

அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தீரா உலா 2: தவாங் யுவதியும் மேஜிக் மொமண்ட்ஸும்

குவஹாத்தியில் இருந்து தவாங் சராசரியாக ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பேருந்துப் பயணம் என்கையில் இதனை நெடுந்தொலைவு என்று சொல்லி விட முடியாதுதான்.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.38 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!

இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.