மாணவர் நிதின் சாய் கொலை: கொலை செய்யும் எண்ணமில்லை.. திமுக பிரமுகர் சந்துரு வாக்குமூலம்!
சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.