K U M U D A M   N E W S
Promotional Banner

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.