K U M U D A M   N E W S
Promotional Banner

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.