மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.