லைஃப்ஸ்டைல்

உட்கார்ந்தே வேலை பார்ப்பவரா? மூளை பாதிக்கும் அபாயம்! EXERCISE-ஆல் பிரயோஜனம் இல்ல?

பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.

உட்கார்ந்தே வேலை பார்ப்பவரா?   மூளை பாதிக்கும் அபாயம்!  EXERCISE-ஆல் பிரயோஜனம் இல்ல?
உட்கார்ந்தே வேலை பார்ப்பவரா? மூளை பாதிக்கும் அபாயம்! EXERCISE-ஆல் பிரயோஜனம் இல்ல?
நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நம்மில் பெரும்பாலானோர் எந்நேரமும் அமர்ந்திருக்கும் சூழல் உள்ளது. தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் கலாச்சாரமும் தலைதூக்கிவிட்டதால், பெரும்பாலும் சோபா அல்லது நாற்காலியிலேயே முக்கால்வாசி நாளை நாம் கழித்துவிடுகிறோம். அவனுக்கு என்ன’பா ஏசி, ஃபேன், உட்கார்ந்தே வேலை பார்த்து காசு சம்பாதிக்குறான் என பலர் நம்மை பார்த்து வாய்பிளக்கலாம். ஆனால் பல மணி நேரம் உட்கார்ந்தே இருப்பதால் பல நோய்கள் மெதுவாக நம்மை கொல்லும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக நேரம் உட்கார்ந்திருப்பது புகைப்பிடித்தலுக்கு சமம் என நமக்கு காலம் காலமாக தெரியப்படுத்தப்பட்ட ஒன்றே. இதனால் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை ஜிம்முக்கு செல்லவேண்டும், walking செல்ல வேண்டும் என்றெல்லாம் மருத்துவர்கள் கூறி வந்தனர்.

சரி, வேலையில் வெகு நேரம் உட்கார்ந்திருப்பதை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், வேலை முடிந்த பிறகு உடற்பயிற்சி செய்துக்கொள்ளலாம் என்று நாம் நிம்மதியாக இருந்தோம். ஆனால் சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு ஒரு ஆய்வு வெளியானது

UK BioBank என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், மணிக் கணக்காக உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாகவும், உடற்பயிற்சி செய்தாலும் அவர்களால் தப்ப இயலாது எனவும் தெரியவந்தது மொத்தம் 90,000 பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் உட்காருவதை தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.

இவ்வளவு நாள், அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் உடலில் தான் பிரச்னைகள் ஏற்படும் என பார்த்தால் தற்போது மூளையையும் அது பாதிக்கும் என தெரியவந்துள்ளது. அதவாது அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிக்கப்படும் எனவும், இதனால் மூளை சுருங்கி நினைவாற்றல் பாதிக்கப்படும் என அமெரிக்காவின் Vanderbilt பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நேரம் அமர்ந்திருக்கும்போது, மூளைக்கான ரத்த ஓட்டம் குறைவதால், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறதாம்.

இந்நிலையில், வேலை நேரத்தின் போது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடக்கும்படி அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒருவருக்கு அதீத நேரம் உட்கார்ந்திருந்தால் இருதய நோய்கான அபாயம் இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை கைவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படி ஏறி இறங்குதல் என அடிக்கடி கை, கால்களை அசைக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகமே தற்போது குறைந்த வேலை நாட்கள், குறைந்த வேலை நேரம் என்ற கான்செப்டை நோக்கி நகர்கிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் 8 மணி நேர வேலை 12 மணி நேர வேலை எல்லாம் மாறாமல் அப்படியே உள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் இந்த நிலையை மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.