சமையல், ஆன்மிகம், கலை, தையல், கோலம் என்று பெண்களுக்கு விருப்பமான விஷயங்கள் மட்டுமல்லாமல்; அவர்களுக்குத் தேவையான மனநலம், உடல்நலம், பொருளாதாரம் சார்ந்த பல விஷயங்களையும் வழங்கி, ஒவ்வொரு பெண்ணின் வீட்டிலும் ஓர் அங்கமாய், தாயாய், சகோதரியாய், சிநேகிதியாய் மாறிப்போயிருக்கும், குமுதம் சிநேகிதி வெள்ளிவிழா காண்கிறது. 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமுதம் சிநேகிதி-க்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். வாழ்த்து செய்திகளில் சில உங்கள் பார்வைக்கு
கட்டமைக்கப்பட்ட காவியம்- வெ.இறையன்பு
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தனது வாழ்த்து செய்தியில், “பெண்களே நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். விதைகள் விழுவதைக் கண்டு, வேட்டையாடியதிலிருந்து வேளாண்மைக்கு மனிதர்களை மடைமாற்றம் செய்தவர்கள். கனிக்கொத்து உண்டானபோது, அவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள். எனினும், பெண்ணே கட்டடத்தை கலைநயமிக்க இல்லமாக்குகிறாள். அவளே இருண்ட வீட்டிலும் ஒளியைப் பாய்ச்சுகிறாள். பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் மூளையமைப்பு சிறப்பு வாய்ந்தது. நரம்பணுக்கள் இறுக்கமாக வேயப்பட்ட பெண்களின் மூளை, மொழி வளத்திலும், தகவல் தொடர்பிலும் பட்டொளி வீசிப் பரிமளிக்கும் ஆற்றல் கொண்டது.

பெண்களின் பிரச்னைகளைப் பெண்களே பேசமுடியும். பெண்களின் மொழி அலாதியானது. அது, அன்பு, அனுசரணை, கருணை, கனிவு கொண்டது. அவர்களுடைய மொழியில் அவர்களுடன் திண்ணையில் அமர்ந்து பேசுவது போன்ற அக்கறையுடன் ‘குமுதம் சிநேகிதி' இதழ் கட்டமைக்கப்பட்டு, காவியம் படைத்திருக்கிறது. 25-வது ஆண்டு சிறப்பிதழைச் செறிவான படைப்புகளால் அலங்கரித்து, உங்கள் கைகளில் தவழும் ‘குமுதம் சிநேகிதி’ பெண்கள் இதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான சிநேகிதிகள் கிடைத்தார்கள்- துர்கா ஸ்டாலின்
தமிழக முதல்வரின் துணைவியாரும், எழுத்தாளருமான துர்கா ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் “ ‘குமுதம் சிநேகிதி’யில் நான் தொடர் எழுதுவதற்கு முன்பிருந்தே படித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான விஷயங்களும் அதில் இடம்பெறும். விதவிதமான சமையல் ரெசிபிகள் வரும். அதையும், தனியே எடுத்துவைத்து செய்து பார்ப்பதற்கு வசதியாக, 'குட்டி புக்'கும் வரும்.
விதவிதமான கோயில்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் ஒவ்வோர் இதழிலும் வரும். உடல்நலம் பற்றி, குடும்ப உறவுகள் பற்றி, குழந்தைகள் வளர்ப்புப் பற்றி, கைவினைப்பொருள்கள் செய்வது பற்றி... ஏன், தையல் பற்றிகூட அதில் வந்துகொண்டிருந்தது. இவையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

முக்கியமாக, ‘பயணக் கட்டுரைகள்' நாமே நேரில் போய் வந்தது போன்று மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். பெண்களின் நுணுக்கமான உணர்வுகள் பற்றிய தலையங்கம், பெண்களுக்கு வழிகாட்டுவது போன்ற கட்டுரைகள் நிறைய இடம்பெறும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நானே 'குமுதம் சிநேகிதி'யில் ‘தளபதியும் நானும்’, ‘அவரும் நானும்' என்று 2 பாகங்கள் தொடராக எழுதினேன். அதன்மூலமாக எனக்கு, பல்லாயிரக்கணக்கான சிநேகிதிகள் கிடைத்தார்கள். அவர்களில் பலர், இன்றுவரை என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பத்திரிகை, 'குமுதம் சிநேகிதி'. தற்போதும் நான் அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 25-வது ஆண்டில் 'குமுதம் சிநேகிதி' அடியெடுத்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் பத்திரிகை, மேலும் மேலும் மேன்மையும் புகழும் அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
உத்வேகம் தந்து ஊக்குவிக்கிறாள்- சௌமியா அன்புமணி
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவி சௌமியா அன்புமணி தனது வாழ்த்து செய்தியில், ”அச்சு ஊடகத்தில் 24 ஆண்டுகளாக மங்கையர் மனதில் தனி இடத்தைப் பிடித்தவள், ‘குமுதம் சிநேகிதி’. கால் நூற்றாண்டுகளாக வித்தியாசமான தொடர்கள், விதவிதமான கட்டுரைகள், புது எழுத்தாளர்கள், பிரபல கட்டுரையாளர்கள் எனப் பலரையும் அறிமுகப்படுத்திய பெருமை 'குமுதம் சிநேகிதி'யையே சாரும். ஆன்மிகம், அரசியல், இல்லறம், ஆரோக்கியம், அறிமுகங்கள், வரலாறு படைத்தவர்கள், புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறவர்கள் என வயது வித்தியாசமின்றி, தலைப்பு வித்தியாசமின்றி அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி, அனைவருக்கும் புரியும்படி அள்ளித் தருகிறாள், 'குமுதம் சிநேகிதி'.
'போற்றிப் பாடடி பெண்ணே' என்ற தொடரை 75 அத்தியாயங்கள் எழுத எனக்கு வாய்ப்பளித்த குமுதம் குழுமத் தலைவர் மற்றும் பதிப்பாளர் பா.வரதராசன் அவர்களுக்கும், முன்னாள் ஆசிரியரும் அமரருமான ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கும், 'குமுதம் சிநேகிதி' ஆசிரியர் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. புதிய படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் முதலிடம் வகிக்கிறாள், 'குமுதம் சிநேகிதி”. தரமானக் கட்டுரைகள், தொடர்கள், எழுத்துகள் மூலமாகப் பெண்களுக்கு சிந்தனைத் தெளிவையும் உத்வேகத்தையும் தருகிறாள். 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'குமுதம் சிநேகிதி', இன்றுபோல் இளமையாய்ப் பல்லாண்டுகள் எழுத்துலகில் தடம்பதிக்க வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.
(குமுதம் சிநேகிதி வெள்ளிவிழா சிறப்பிதழ் தற்போது கடைகளில் விற்பனையில் உள்ளது. 4 புதிய தொடர்களுடன் பல எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வாங்கி பயன்பெறுங்கள்)
கட்டமைக்கப்பட்ட காவியம்- வெ.இறையன்பு
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தனது வாழ்த்து செய்தியில், “பெண்களே நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். விதைகள் விழுவதைக் கண்டு, வேட்டையாடியதிலிருந்து வேளாண்மைக்கு மனிதர்களை மடைமாற்றம் செய்தவர்கள். கனிக்கொத்து உண்டானபோது, அவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள். எனினும், பெண்ணே கட்டடத்தை கலைநயமிக்க இல்லமாக்குகிறாள். அவளே இருண்ட வீட்டிலும் ஒளியைப் பாய்ச்சுகிறாள். பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் மூளையமைப்பு சிறப்பு வாய்ந்தது. நரம்பணுக்கள் இறுக்கமாக வேயப்பட்ட பெண்களின் மூளை, மொழி வளத்திலும், தகவல் தொடர்பிலும் பட்டொளி வீசிப் பரிமளிக்கும் ஆற்றல் கொண்டது.

பெண்களின் பிரச்னைகளைப் பெண்களே பேசமுடியும். பெண்களின் மொழி அலாதியானது. அது, அன்பு, அனுசரணை, கருணை, கனிவு கொண்டது. அவர்களுடைய மொழியில் அவர்களுடன் திண்ணையில் அமர்ந்து பேசுவது போன்ற அக்கறையுடன் ‘குமுதம் சிநேகிதி' இதழ் கட்டமைக்கப்பட்டு, காவியம் படைத்திருக்கிறது. 25-வது ஆண்டு சிறப்பிதழைச் செறிவான படைப்புகளால் அலங்கரித்து, உங்கள் கைகளில் தவழும் ‘குமுதம் சிநேகிதி’ பெண்கள் இதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான சிநேகிதிகள் கிடைத்தார்கள்- துர்கா ஸ்டாலின்
தமிழக முதல்வரின் துணைவியாரும், எழுத்தாளருமான துர்கா ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் “ ‘குமுதம் சிநேகிதி’யில் நான் தொடர் எழுதுவதற்கு முன்பிருந்தே படித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான விஷயங்களும் அதில் இடம்பெறும். விதவிதமான சமையல் ரெசிபிகள் வரும். அதையும், தனியே எடுத்துவைத்து செய்து பார்ப்பதற்கு வசதியாக, 'குட்டி புக்'கும் வரும்.
விதவிதமான கோயில்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் ஒவ்வோர் இதழிலும் வரும். உடல்நலம் பற்றி, குடும்ப உறவுகள் பற்றி, குழந்தைகள் வளர்ப்புப் பற்றி, கைவினைப்பொருள்கள் செய்வது பற்றி... ஏன், தையல் பற்றிகூட அதில் வந்துகொண்டிருந்தது. இவையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

முக்கியமாக, ‘பயணக் கட்டுரைகள்' நாமே நேரில் போய் வந்தது போன்று மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். பெண்களின் நுணுக்கமான உணர்வுகள் பற்றிய தலையங்கம், பெண்களுக்கு வழிகாட்டுவது போன்ற கட்டுரைகள் நிறைய இடம்பெறும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நானே 'குமுதம் சிநேகிதி'யில் ‘தளபதியும் நானும்’, ‘அவரும் நானும்' என்று 2 பாகங்கள் தொடராக எழுதினேன். அதன்மூலமாக எனக்கு, பல்லாயிரக்கணக்கான சிநேகிதிகள் கிடைத்தார்கள். அவர்களில் பலர், இன்றுவரை என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பத்திரிகை, 'குமுதம் சிநேகிதி'. தற்போதும் நான் அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 25-வது ஆண்டில் 'குமுதம் சிநேகிதி' அடியெடுத்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் பத்திரிகை, மேலும் மேலும் மேன்மையும் புகழும் அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
உத்வேகம் தந்து ஊக்குவிக்கிறாள்- சௌமியா அன்புமணி
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவி சௌமியா அன்புமணி தனது வாழ்த்து செய்தியில், ”அச்சு ஊடகத்தில் 24 ஆண்டுகளாக மங்கையர் மனதில் தனி இடத்தைப் பிடித்தவள், ‘குமுதம் சிநேகிதி’. கால் நூற்றாண்டுகளாக வித்தியாசமான தொடர்கள், விதவிதமான கட்டுரைகள், புது எழுத்தாளர்கள், பிரபல கட்டுரையாளர்கள் எனப் பலரையும் அறிமுகப்படுத்திய பெருமை 'குமுதம் சிநேகிதி'யையே சாரும். ஆன்மிகம், அரசியல், இல்லறம், ஆரோக்கியம், அறிமுகங்கள், வரலாறு படைத்தவர்கள், புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறவர்கள் என வயது வித்தியாசமின்றி, தலைப்பு வித்தியாசமின்றி அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி, அனைவருக்கும் புரியும்படி அள்ளித் தருகிறாள், 'குமுதம் சிநேகிதி'.
'போற்றிப் பாடடி பெண்ணே' என்ற தொடரை 75 அத்தியாயங்கள் எழுத எனக்கு வாய்ப்பளித்த குமுதம் குழுமத் தலைவர் மற்றும் பதிப்பாளர் பா.வரதராசன் அவர்களுக்கும், முன்னாள் ஆசிரியரும் அமரருமான ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கும், 'குமுதம் சிநேகிதி' ஆசிரியர் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. புதிய படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் முதலிடம் வகிக்கிறாள், 'குமுதம் சிநேகிதி”. தரமானக் கட்டுரைகள், தொடர்கள், எழுத்துகள் மூலமாகப் பெண்களுக்கு சிந்தனைத் தெளிவையும் உத்வேகத்தையும் தருகிறாள். 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'குமுதம் சிநேகிதி', இன்றுபோல் இளமையாய்ப் பல்லாண்டுகள் எழுத்துலகில் தடம்பதிக்க வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.
(குமுதம் சிநேகிதி வெள்ளிவிழா சிறப்பிதழ் தற்போது கடைகளில் விற்பனையில் உள்ளது. 4 புதிய தொடர்களுடன் பல எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வாங்கி பயன்பெறுங்கள்)