K U M U D A M   N E W S

Author : MUTHUKRISHNAN MURUGAN

பசங்க பட நாயகனுக்கு திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

கற்றது தமிழ் மற்றும் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் ஸ்ரீராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதுத்தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

சின்ன மருமகள் சீரியல் வெற்றி- ரசிகர்களுக்கு விருந்து வைத்த விஜய் டிவி

"சின்ன மருமகள்" நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய போதை ஆசாமி.. வைரல் வீடியோ!

மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்

கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கோயிலின் உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

பாத்ரூமில் அமர்ந்தவாறு நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிய நபர்.. வைரலாகும் வீடியோ

காணொலி வாயிலான நீதிமன்ற விசாரணையின் போது, ஒருவர் கழிப்பறையில் இருந்தபடியே பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாதம் தொட்டு கேட்கிறேன்.. ’பறந்து போ’ படம் குறித்து இயக்குநர் பாலா!

”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என ‘பறந்து போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் இயக்குநர் பாலா.

KILLER: ரோல் கேமரா.. ஆக்‌ஷன்.. கட்.. மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா!

”எப்போ சார் திரும்ப டைரக்ட் பண்ணப் போறீங்க?” என தன்னை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு கில்லர் படத்தின் மூலம் விடைக்கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

1066 அவசர ஆம்புலன்ஸ் சேவை- அப்போலோ மருத்துவமனை எடுத்த முன்னெடுப்பு!

அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஆட்டோ வேணும் சார்.. 3 மாதத்தில் கோரிக்கையினை நிறைவேற்றிய ஆளுநர்!

மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

துணை முதல்வர் பதவி கேட்பீங்களா? டிடிவி தினகரன் அளித்த ரிப்ளை

”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

2 வருடம்.. 10 இயக்குநர்கள்.. சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

டெல்லி PWD உலக சாதனை: ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு!

ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.

நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

போலீசார் பிடியில் நடிகர் கிருஷ்ணா.. போதைப் பொருள் தொடர்பாக விடிய விடிய விசாரணை!

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.