2023 ஆம் ஆண்டு அதிமுக பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க.வுடனான கூட்டணியே தி.மு.கவை வீழ்த்தும் என பா.ஜ.க. நம்புகிறது. எனவே இக்கூட்டணிக்கு இடையூறாக இருந்த அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடியை சமாதானப்படுத்தியது. தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், கூட்டணிக்கு இடையூறு செய்யும் வேலையை அண்ணாமலை தொடர்ந்து செய்து வருகிறார். அமித்ஷா மதுரை வந்தபோதே, அண்ணாமலையிடம் தனியாக ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது, 'அ.தி.மு.க. குறித்தோ கூட்டணி குறித்தோ நெகடிவ்வாக எதுவும் பேசக்கூடாது' என அட்வைஸ் செய்திருந்தாராம்.
இந்த நிலையில், அமித்ஷா டெல்லி கிளம்பிச் சென்ற மறுநாள், பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அதில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளதாகவும், அந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் அதற்கேற்ற தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவிகித அடிப்படையில், தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமு.க. கூட்டணிக்கு 19.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ.க கூட்டணி, 11.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. மதுரை, கோவை உள்ளிட்ட பல முக்கிய தொகுதிகளில் பா.ஜ.க, அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றது. எனவே அதிமுக கூட்டணியில், வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பா.ஜ.க தொகுதிப் பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம் என்று அண்ணாமலை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
அதாவது. இரண்டு சட்டசபை தொகுதிகளில் அதிமு.க. போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ.க போட்டியிட வேண்டும் என அந்தக் கடிதத்தில் அண்ணாமலை புள்ளி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பிரதமருக்கு அண்ணாமலை எழுதியிருக்கும் சுடிதம் குறித்து, தலைமைக்கு தகவல் தெரிந்ததும் சீனியர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார் என்றும், இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் எடப்பாடி தொலைபேசியில் பேசினார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, “ கூட்டணிக்கு விரிசல் ஏற்படுத்தும் நடவடிக்கையில் சில பாஜகவினரே ஈடுபடுகின்றனர். அவர்களை டெல்லி தலைவர்களிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால், எங்கள் தரப்பிலிருந்து பதிலடி வருவதை என்னால் தடுக்க முடியாது” என எடப்பாடியார் தெரிவித்தாராம்.
பாஜக மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் பேசினோம். "2026 தேர்தலில் யார் எவ்வளவு சீட் என்பதை தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி அண்ணாமலை பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கும் விவகாரம் எனக்குத் தெரியாது” என சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
இப்படியாக, அண்ணாமலை தலைவராக இல்லாவிட்டாலும், தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கும் நிலையில், அதனால் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் விரிசல் விழுந்தால் அவர் கட்சியிலேயே இருப்பாரா என்பது சந்தேகமே..
(( குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் ரய்யான் பாபு))
இந்த நிலையில், அமித்ஷா டெல்லி கிளம்பிச் சென்ற மறுநாள், பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அதில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளதாகவும், அந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் அதற்கேற்ற தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவிகித அடிப்படையில், தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமு.க. கூட்டணிக்கு 19.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ.க கூட்டணி, 11.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. மதுரை, கோவை உள்ளிட்ட பல முக்கிய தொகுதிகளில் பா.ஜ.க, அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றது. எனவே அதிமுக கூட்டணியில், வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பா.ஜ.க தொகுதிப் பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம் என்று அண்ணாமலை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
அதாவது. இரண்டு சட்டசபை தொகுதிகளில் அதிமு.க. போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ.க போட்டியிட வேண்டும் என அந்தக் கடிதத்தில் அண்ணாமலை புள்ளி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பிரதமருக்கு அண்ணாமலை எழுதியிருக்கும் சுடிதம் குறித்து, தலைமைக்கு தகவல் தெரிந்ததும் சீனியர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார் என்றும், இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் எடப்பாடி தொலைபேசியில் பேசினார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, “ கூட்டணிக்கு விரிசல் ஏற்படுத்தும் நடவடிக்கையில் சில பாஜகவினரே ஈடுபடுகின்றனர். அவர்களை டெல்லி தலைவர்களிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால், எங்கள் தரப்பிலிருந்து பதிலடி வருவதை என்னால் தடுக்க முடியாது” என எடப்பாடியார் தெரிவித்தாராம்.
பாஜக மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் பேசினோம். "2026 தேர்தலில் யார் எவ்வளவு சீட் என்பதை தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி அண்ணாமலை பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கும் விவகாரம் எனக்குத் தெரியாது” என சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
இப்படியாக, அண்ணாமலை தலைவராக இல்லாவிட்டாலும், தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கும் நிலையில், அதனால் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் விரிசல் விழுந்தால் அவர் கட்சியிலேயே இருப்பாரா என்பது சந்தேகமே..
(( குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் ரய்யான் பாபு))