அரசியல்

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?

நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..?  வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?
நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி பல ஆண்டுகள் அந்த கட்சியை நடத்தி வந்த சரத்குமார், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவுடன் இணைந்துக்கொண்டார். இதற்காக, இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி ஆலோசனை கேட்டு, அதனடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சியோடு தன்னை பா. ஜ.கவில் சரத்குமார் இணைத்துக் கொண்டார்.

கட்சியோடு பாஜகவில் ஐக்கியமான அவருக்கு நிச்சயம் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் அண்ணாமலையின் பதவிக் காலமும் முடிவுற்றதால், மாநில தலைவர் ரேஸ் லிட்டில் சரத்குமாரும் இணைந்தார். ஆனால், நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இப்படி கஷ்டப்பட்டு சேர்ந்த தன்னை, 'பாஜக எந்தப் பொறுப்பையும் வழங்காமல் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறதே' என்கிற ஆதங்கத்தில் சரத் இருக்கிறாராம்.

என்னத்தான், பாஜக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, சரத்குமாருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டாலும், நாட்டாமை மகிழ்ச்சியடையாமல் தனலாக புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறார் என கூறப்படுகிறது.

தி.மு.க, அதிமுகவில் இருந்தபோதே கடன் தொல்லையால் சிக்கித் தவித்த சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியும் எதிர்பார்த்த அளவுக்கு போணி ஆகவில்லை. கடன் மேல் கடன் வாங்கிய சரத்குமார், இப்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறாராம்.

கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தால் பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்து தருவதாக கமலாலய தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாம். அதனை நம்பி, நடுராத்திரி என்றும் பாராமல் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானார் சரத்குமார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், கமலாலயம் தரப்பில் கொடுத்த உத்தரவாதம் எதையும் நிறைவேற்றவில்லையாம்.

இந்த நிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டை மாதம் 3 லட்ச ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சரத்குமார் வாடகைக்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் அவரால் கடன் தொல்லையை சமாளிக்க முடியாததால், கொட்டிவாக்கம் வீட்டை 20 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்து இருக்கிறாராம்.

இதற்கான 'டீல்' தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 18 கோடி ரூபாய் வரை கொட்டிவாக்கம் வீட்டுக்கு ஆஃபர் வந்திருக்கிறது. வீட்டை விற்று கடனை செட்டில் செய்து விடலாம் என்று சரத்குமார் முடிவு செய்திருக்கிறாராம். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக, பாஜகவை நம்பி வந்து ஒன்றும் இல்லாதவராக சரத் மாறிவிட்டாரே என்று முன்னாள் சமகவினர் குமுறுகின்றனர்.

இப்படியான ஒரு சூழலில் சரத்குமார் பாஜகவில் இருந்து விலகுவது மட்டுமல்ல, அரசியலில் இருந்தும் விலகி மீண்டும் சினிமாவில் Concentrate செய்வது நல்லது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.