பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று முதல் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று பேசிய சு. வெங்கடேசன் எம்பி, மத்திய அரசை விமர்சித்து பல்வேறு கேள்விகளை முன்வைர்த்தார்.
இந்த நிலையில், அவருக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சு. வெங்கடேசன் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் மக்களவைக்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும்.
இந்த நிலையில், நேற்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அன்று இரவு யாரோ ஒருவன் சு. வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம் ? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்" என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளான். சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு. வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சு. வெங்கடேசன் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் மக்களவைக்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும்.
இந்த நிலையில், நேற்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அன்று இரவு யாரோ ஒருவன் சு. வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம் ? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்" என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளான். சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு. வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.