தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக தனது x தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வரும் செய்திகள் கண்டனத்துக்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநில அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய முடியாமல் அங்கன்வாடிகளையே மூட ஆயத்தமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை - குறைந்தபட்ச ஊதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்ற வாக்குறுதி 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் நயினார் குறிப்பிட்டுள்ளார். அதனை நிறைவேற்றி அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றை செவ்வனே நடத்திட வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில் (NEP), அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்" என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை - குறைந்தபட்ச ஊதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்ற வாக்குறுதி 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் நயினார் குறிப்பிட்டுள்ளார். அதனை நிறைவேற்றி அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றை செவ்வனே நடத்திட வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில் (NEP), அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்" என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.