சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது முதற்கட்டம், அடுத்தடுத்த கட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள்” என்று வைகைச் செல்வன் பதில் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது" என வைகை செல்வன் கூறியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "நட்பின் அடிப்படையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் அவருடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் திருச்சியில் நாங்கள் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடத்திய சூழலில் நாங்கள் தங்கியிருந்த அறையில் எனக்கு புத்தகத்தை பரிசளித்தார் அவ்வளவுதான்.
விடுதலைப் போரில் சீர்காழி என்கிற புத்தகம் அவர் வழங்கினார். அரசியல் எதுவும் பேசாமல் பலர் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பு. அவர் இலக்கிய தரத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை என்னிடத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். நானும் அரசியல் பேசவில்லை, அவரும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என்று பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு விசிக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு, "அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள்.
அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் கனியவில்லை" என்றார்.
முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம். முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன். முருகனை வழிபடுவதற்கான கோரிக்கைகளை கேட்டேன் சொன்னார்கள். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது" எனக் கூறினார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் குறித்த கேள்விக்கு, "தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமற்றம் விசிக வன்மையாக கண்டிக்கிறது. கீழடி ஆய்வறிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் ஆதாரம் தேவை என சொல்கிறார்கள். ஆனால் என்ன வேண்டும் என வரிசைப்படுத்தவில்லை. உலகளாவிய அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட அடிப்படையில் கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழையது என உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாஜக ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை என்பது தமிழர்களை அவர்கள் எவ்வளவு அந்நியமாக, எதிராக, பொறாமையாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. பாஜக இத்தகைய மனநிலை கொண்ட கட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது" என வைகை செல்வன் கூறியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "நட்பின் அடிப்படையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் அவருடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் திருச்சியில் நாங்கள் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடத்திய சூழலில் நாங்கள் தங்கியிருந்த அறையில் எனக்கு புத்தகத்தை பரிசளித்தார் அவ்வளவுதான்.
விடுதலைப் போரில் சீர்காழி என்கிற புத்தகம் அவர் வழங்கினார். அரசியல் எதுவும் பேசாமல் பலர் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பு. அவர் இலக்கிய தரத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை என்னிடத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். நானும் அரசியல் பேசவில்லை, அவரும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என்று பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு விசிக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு, "அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள்.
அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் கனியவில்லை" என்றார்.
முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம். முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன். முருகனை வழிபடுவதற்கான கோரிக்கைகளை கேட்டேன் சொன்னார்கள். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது" எனக் கூறினார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் குறித்த கேள்விக்கு, "தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமற்றம் விசிக வன்மையாக கண்டிக்கிறது. கீழடி ஆய்வறிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் ஆதாரம் தேவை என சொல்கிறார்கள். ஆனால் என்ன வேண்டும் என வரிசைப்படுத்தவில்லை. உலகளாவிய அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட அடிப்படையில் கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழையது என உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாஜக ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை என்பது தமிழர்களை அவர்கள் எவ்வளவு அந்நியமாக, எதிராக, பொறாமையாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. பாஜக இத்தகைய மனநிலை கொண்ட கட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.