K U M U D A M   N E W S

திமுக

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குண்டு போட்ட வைகைச்செல்வன்.. சிதறும் அறிவாலய கூட்டணி..? நழுவும் திருமா?

திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சொந்த அக்காவிடம் மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை

தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி: கூடுதல் தொகுதி கேட்பது நியாயமான விருப்பம்.. சண்முகம் பேட்டி

"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

மனு ஏற்பு: மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

மாநில உரிமைக் காப்பதில் தமிழக அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொடூர திமுக ஆட்சிக்கு கொங்கு மண்டலமே சாட்சி.. சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.