அரசியல்

O Panner Selvam Speech: "தூய அதிமுக தொண்டர்கள் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்"

 எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்ற சூழல் தமிழக மக்களால் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

திராவிட வரலாற்றில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது அண்ணா எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மட்டுமல்லாது நான் முதல்வராக இருக்கும் பொழுது கூட இரு மொழிக் கொள்கைக்கு தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாவும் தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்தக் கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அதிமுகவின் வரலாறு என்றும் கூறினார்.

எந்த ஒரு தேர்தலிலும் அருமை நண்பர் விஜய் நின்று மக்களுடைய தீர்ப்பை பெறவில்லை மக்களுடைய தீர்ப்பு அவரை நோக்கி எப்படி இருக்கும் என்பதைதெரிந்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தேவகோட்டையில் தெரிவித்துள்ளார்.