உடல்நலக்குறைவால், முதியவர் ஒருவர் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆலங்காயம், பகுதியில், மருந்து கடையின் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு சென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இறந்தவரின் உடலை நள்ளிரவில் டார்ச் லைட் அடித்து, 7 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான சாலையில் டோலி கட்டி தூக்கிச்சென்ற கிராம மக்கள்
ஆட்சிகள் மாறினாலும், தங்களது அவலம் மாறவில்லையென மலைகிராம மக்கள் வேதனை