இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நேற்று (ஜூன் 7) கோவையில் நடைபெற்றது. லண்டனில் 'சிம்பொனி' அரங்கேற்றத்திற்குப் பிறகு இளையராஜா நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இந்த இசை நிகழ்ச்சியை காண அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த திரளான ரசிகர்கள் வருகை தந்தனர்.
இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையை செய்தார். அதன்பின் பேசிய அவர்,
"என்னை பொறுத்தவரை இசை கடவுள் என்றால் இளையராஜாதான். அவரின் இசையை முதலில் இருந்து கேட்க வேண்டும் என்றால் 17 ஆண்டுகள் தேவை. மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து தருணங்களிலும் இளையராஜாவின் இசை நம்முடன் இருக்கும். தமிழ்நாட்டின் அடையாளமாக, இந்தியாவின் பெருமையாக,
இருக்கிறார்" என்றார்
மேலும், ஆசியாவைச் சார்ந்த முதல் மனிதர் லண்டன், வெஸ்டர்ன் கிளாசிக்கல் சிம்பனி இசையில், மீட் லோஃப் இவர்களெல்லாம் போட்ட இசைக்கு மேலே வேலன்ச சிம்பல் இசையை கொடுத்து விட்டு, நம்முடைய மாநகரத்திற்கு வந்து உள்ளார்கள். இதை நாம் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும். காரணம் சிம்பொனியின் கிராமர், அர்த்தமேட்டிக் எல்லாம் வெஸ்டர்ன் மக்கள் செய்தது. அதை எல்லாம் உடைத்து ரூல்ஸ் ஆப் இளையராஜா என்பதை லண்டனுக்கு கொண்டு சென்ற இளையராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். உங்களது இசை தொடர்ந்து எங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இசைத்துறையில் 50 - வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவை தேடி அனைத்து விருதுகளும் தேடி வருகிறது. எல்லா மனிதர்களும் அவரிடம் வந்துவிட்டனர். நான் சார்ந்திருக்கும் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா உள்ளார்" என புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையை செய்தார். அதன்பின் பேசிய அவர்,
"என்னை பொறுத்தவரை இசை கடவுள் என்றால் இளையராஜாதான். அவரின் இசையை முதலில் இருந்து கேட்க வேண்டும் என்றால் 17 ஆண்டுகள் தேவை. மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து தருணங்களிலும் இளையராஜாவின் இசை நம்முடன் இருக்கும். தமிழ்நாட்டின் அடையாளமாக, இந்தியாவின் பெருமையாக,
இருக்கிறார்" என்றார்
மேலும், ஆசியாவைச் சார்ந்த முதல் மனிதர் லண்டன், வெஸ்டர்ன் கிளாசிக்கல் சிம்பனி இசையில், மீட் லோஃப் இவர்களெல்லாம் போட்ட இசைக்கு மேலே வேலன்ச சிம்பல் இசையை கொடுத்து விட்டு, நம்முடைய மாநகரத்திற்கு வந்து உள்ளார்கள். இதை நாம் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும். காரணம் சிம்பொனியின் கிராமர், அர்த்தமேட்டிக் எல்லாம் வெஸ்டர்ன் மக்கள் செய்தது. அதை எல்லாம் உடைத்து ரூல்ஸ் ஆப் இளையராஜா என்பதை லண்டனுக்கு கொண்டு சென்ற இளையராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். உங்களது இசை தொடர்ந்து எங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இசைத்துறையில் 50 - வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவை தேடி அனைத்து விருதுகளும் தேடி வருகிறது. எல்லா மனிதர்களும் அவரிடம் வந்துவிட்டனர். நான் சார்ந்திருக்கும் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா உள்ளார்" என புகழாரம் சூட்டினார்.