தமிழ்நாடு அரசின் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் வெளிப்புறத்தில் தமிழ்நாடு என்கிற பெயர் நீக்கப்பட்டுள்ளதாக முன்னணி நாளிதழ் உட்பட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இதற்கு, அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அமைச்சர் அளித்த பதில்கள் பின்வருமாறு-
பெயரில் திருத்தம் எதற்காக?
”தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில், ’அரசு போக்குவரத்து கழகம்’ என்று மட்டும் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் காணவில்லை என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் துவக்கி வைத்த பேருந்துகளில் ’அரசு போக்குவரத்துக் கழகம்’ (2012 ஆம் ஆண்டு) என்று தான் உள்ளது. அப்போது தமிழ்நாடு என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-திருநெல்வேலி’, ’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம்’ என முழுமையாக பதிவு செய்தால் அது நீண்ட பெயராக உள்ளது, படிப்பதற்கும் வசதியாக இல்லை. இந்த காரணத்தினால் தான், அதிமுக ஆட்சிக் காலத்தில் இது மாற்றப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நடந்த விஷயத்தை 2025 ஆம் ஆண்டு நடைப்பெற்றதாக பேசி வருகிறார்கள். ஒரு காலத்தில் பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருக்கிறது என்றார்கள், தற்போது பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் சேவை பேருந்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்:
”இந்த பிரச்னை எல்லாம் தீர்ந்த நிலையில் தற்போது திமுக மீது எந்த பிரச்னையினை கூறுவது? என்று தெரியாமல் தமிழ்நாடு என்று இல்லை என புதிய குற்றச்சாட்டை தற்போது பரப்பி வருகிறார்கள். மெட்ராஸ் மாநிலம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள். எங்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டியதில்லை.
இது அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து கழத்தில் பணியாற்றுபவர்களுக்கு இது எளிமையாக உள்ளதாக கூறியதால் இது அப்படியே விடப்பட்டுள்ளது. இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாற்றப்பட்டது என்ற செய்தியை பரப்புபபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்தாண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் 7 லட்சம் பேர் முன்பதிவு மட்டும் செய்து பயணித்துள்ளார்கள். அரசு போக்குவரத்து கழகத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் பயணித்தவர்கள் எல்லாம், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பதன் காரணமாக இந்த கூடுதல் முன்பதிவு ஏற்பட்டுள்ளது” என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்கு, அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அமைச்சர் அளித்த பதில்கள் பின்வருமாறு-
பெயரில் திருத்தம் எதற்காக?
”தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில், ’அரசு போக்குவரத்து கழகம்’ என்று மட்டும் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் காணவில்லை என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் துவக்கி வைத்த பேருந்துகளில் ’அரசு போக்குவரத்துக் கழகம்’ (2012 ஆம் ஆண்டு) என்று தான் உள்ளது. அப்போது தமிழ்நாடு என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-திருநெல்வேலி’, ’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம்’ என முழுமையாக பதிவு செய்தால் அது நீண்ட பெயராக உள்ளது, படிப்பதற்கும் வசதியாக இல்லை. இந்த காரணத்தினால் தான், அதிமுக ஆட்சிக் காலத்தில் இது மாற்றப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நடந்த விஷயத்தை 2025 ஆம் ஆண்டு நடைப்பெற்றதாக பேசி வருகிறார்கள். ஒரு காலத்தில் பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருக்கிறது என்றார்கள், தற்போது பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் சேவை பேருந்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்:
”இந்த பிரச்னை எல்லாம் தீர்ந்த நிலையில் தற்போது திமுக மீது எந்த பிரச்னையினை கூறுவது? என்று தெரியாமல் தமிழ்நாடு என்று இல்லை என புதிய குற்றச்சாட்டை தற்போது பரப்பி வருகிறார்கள். மெட்ராஸ் மாநிலம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள். எங்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டியதில்லை.
இது அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து கழத்தில் பணியாற்றுபவர்களுக்கு இது எளிமையாக உள்ளதாக கூறியதால் இது அப்படியே விடப்பட்டுள்ளது. இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாற்றப்பட்டது என்ற செய்தியை பரப்புபபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்தாண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் 7 லட்சம் பேர் முன்பதிவு மட்டும் செய்து பயணித்துள்ளார்கள். அரசு போக்குவரத்து கழகத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் பயணித்தவர்கள் எல்லாம், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பதன் காரணமாக இந்த கூடுதல் முன்பதிவு ஏற்பட்டுள்ளது” என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.