தமிழக வெற்றிக்கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பாரதிதாசனின் இல்ல புதுமனை புகுவிழாவில் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பண மாலை அணிவித்து வரவேற்பு:
விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நோக்கத்தோடு த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றார். மாவட்ட செயலாளரின் சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் திமுகவினை சேர்ந்தவர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப நண்பர் என்கிற முறையில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலுடன் தவெக மாவட்ட செயலாளரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய போது சர்ச்சை கிளம்பியது.
காரணம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில், திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளரே திமுக அமைச்சருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க பணமாலை அணிவித்து வரவேற்றது பேசுப்பொருளாகியது. தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில், அவருக்கு இதுப்போல் வரவேற்பு அளிக்காததும் விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிதாசன், அமைச்சர் எ.வ.வேலுக்கு பணமாலை அணிவித்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்-க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-
”கடந்த 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று எனது புதிய இல்ல புதுமனை புகுவிழாவிற்கு நம் கழக சொந்தங்கள் அனைவரையும் அழைத்தேன். அதேபோன்று எனது குடும்ப நண்பரான மாற்று கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால் அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களை தவிர வேறு எந்த ஒரு மாற்று கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் தலைவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பண மாலை அணிவித்து வரவேற்பு:
விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நோக்கத்தோடு த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றார். மாவட்ட செயலாளரின் சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் திமுகவினை சேர்ந்தவர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப நண்பர் என்கிற முறையில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலுடன் தவெக மாவட்ட செயலாளரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய போது சர்ச்சை கிளம்பியது.
காரணம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில், திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளரே திமுக அமைச்சருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க பணமாலை அணிவித்து வரவேற்றது பேசுப்பொருளாகியது. தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில், அவருக்கு இதுப்போல் வரவேற்பு அளிக்காததும் விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிதாசன், அமைச்சர் எ.வ.வேலுக்கு பணமாலை அணிவித்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்-க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-
”கடந்த 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று எனது புதிய இல்ல புதுமனை புகுவிழாவிற்கு நம் கழக சொந்தங்கள் அனைவரையும் அழைத்தேன். அதேபோன்று எனது குடும்ப நண்பரான மாற்று கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால் அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களை தவிர வேறு எந்த ஒரு மாற்று கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் தலைவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.