மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
"அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். திமுக அரசாங்கம் எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடுவது கிடையாது. திமுக தான் 'யார் அந்த சார்' என்பதை சொல்ல மறுக்கின்றனர்" என்றார்.
திமுக கூட்டணி வலுவாக இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே. ஏன் வலுவாக உள்ளதாக என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.?
அங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. சாலையில் சென்றால் கூட்டம் கூடுகிறது. அப்படி இருக்கும்போது எங்கள் கூட்டணி STRONG-காக உள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும். அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் சொல்கிறார்கள். என்ன கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள்" எனத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்விக்கு, "அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார்கள்" என்று பதிலளித்தார்.
மேலும், தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்கு வராதது வருத்தமளிக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " மக்கள் தான் கூட்டணி, மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் சொல்ல முடியும்" என்றார்.
"அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். திமுக அரசாங்கம் எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடுவது கிடையாது. திமுக தான் 'யார் அந்த சார்' என்பதை சொல்ல மறுக்கின்றனர்" என்றார்.
திமுக கூட்டணி வலுவாக இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே. ஏன் வலுவாக உள்ளதாக என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.?
அங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. சாலையில் சென்றால் கூட்டம் கூடுகிறது. அப்படி இருக்கும்போது எங்கள் கூட்டணி STRONG-காக உள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும். அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் சொல்கிறார்கள். என்ன கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள்" எனத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்விக்கு, "அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார்கள்" என்று பதிலளித்தார்.
மேலும், தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்கு வராதது வருத்தமளிக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " மக்கள் தான் கூட்டணி, மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் சொல்ல முடியும்" என்றார்.