பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், நாங்கள் விரிவான சமூகப் பொருளாதார சாதி சர்வே மேற்கொள்ளவிருக்கிறோம் என சித்தராமையா குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு பாகற்காயை விட மோசமாக கசப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, சாதிவாரி மக்கள்தொகை சர்வே எடுப்பதற்கான தேவை அண்டை மாநிலங்களை விட நூறு மடங்கு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு தீர்மானித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால், அதற்கு தமிழக அரசிடம் பதில் இருக்காது என தெரிவித்துள்ள அன்புமணி, 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
சாதிவாரி சர்வேயை நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஆட்சியாளர்களுக்கு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்க எண்ணம் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். சமூகநீதியைக் காப்பது தான் தமது அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு தீர்மானித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால், அதற்கு தமிழக அரசிடம் பதில் இருக்காது என தெரிவித்துள்ள அன்புமணி, 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
சாதிவாரி சர்வேயை நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஆட்சியாளர்களுக்கு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்க எண்ணம் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். சமூகநீதியைக் காப்பது தான் தமது அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.