உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், தற்போது ஆரணி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சேவூர் ராமச்சந்திரன், சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
அதன் தொடர்ச்சியாக சேவூர் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது 2 மகன்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2016 - 2021 காலக்கட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், உசிலம்பட்டியில் உள்ள நீதிபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று காலை 8 மணி முதல் உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள எம்எல்ஏ நீதிபதி வீட்டில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்
மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், அவரது ஆதரவாளர்களும் வீட்டின் முன்பு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,
கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், தற்போது ஆரணி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சேவூர் ராமச்சந்திரன், சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
அதன் தொடர்ச்சியாக சேவூர் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது 2 மகன்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2016 - 2021 காலக்கட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், உசிலம்பட்டியில் உள்ள நீதிபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று காலை 8 மணி முதல் உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள எம்எல்ஏ நீதிபதி வீட்டில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்
மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், அவரது ஆதரவாளர்களும் வீட்டின் முன்பு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,