திருவள்ளுர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி விவகாரத்தில், அவரது தம்பியை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் உள்ளதாக புகார் எழுந்தது.
சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிபதி கேள்வி
இது தொடர்பாக முன் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சென்னை உயர்நீதுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.மேலும் எல்லைகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் மனு மீதான விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
காவல் துறை விசாரணை நடத்தி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரான நிலையில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த பாதுகாப்போடு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் எஸ்பியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனிடையே பலத்த பாதுகாப்புடன் ஏடிஜிபி ஜெயராமன் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சுமார் 1 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.
சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
முன்னதாக ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு கைரேகை பதியப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிபதி கேள்வி
இது தொடர்பாக முன் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சென்னை உயர்நீதுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.மேலும் எல்லைகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் மனு மீதான விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
காவல் துறை விசாரணை நடத்தி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரான நிலையில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த பாதுகாப்போடு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் எஸ்பியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனிடையே பலத்த பாதுகாப்புடன் ஏடிஜிபி ஜெயராமன் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சுமார் 1 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.
சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
முன்னதாக ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு கைரேகை பதியப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.