போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏ1 பிரதீப்குமார், ஏ2 ஜான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஏ3 யாக நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சேர்க்கப்பட உள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது
போதை பொருள் தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு, வைத்து இருந்த குற்றத்திற்காகவும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஏன் கைது செய்ய வேண்டும் என சிலர் கேள்விகள் எழுப்பிய நிலையில், இந்த போதை பொருள் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆதாரத்துடன் அனைவரையும் கைது செய்து வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க அனைவரும் அதன் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விற்பனை தொடர்பாக பொதுமக்களும் தகவல் அளிக்கலாம் அவர்களின் விவரங்கள் ரகசிய காக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் திட்டம்
பிரதீப் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நண்பர்களான லிங்கேஸ்வரன், யோகராஜ், யூசுப், கெவின் மற்றும் ஆட்கள் மூலமாகவும் கொகைனை வாங்கி பயன்படுத்தவும் செய்வார் என்பது பிரதீப்பின் வாக்குமூலம் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்திற்கு மட்டும் 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக ஐடி விங் முன்னாள் மாநில நிர்வாகி பிரசாத்தை இந்த வழக்கில் சேர்த்து கைது செய்வதுடன், காவலில் எடுத்து விசாரிக்கவும் நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் பாரில் தகராறு, வேலை வாங்கி தருவதாக மோசடி என மொத்தம் ஐந்து வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது
போதை பொருள் தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு, வைத்து இருந்த குற்றத்திற்காகவும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஏன் கைது செய்ய வேண்டும் என சிலர் கேள்விகள் எழுப்பிய நிலையில், இந்த போதை பொருள் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆதாரத்துடன் அனைவரையும் கைது செய்து வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க அனைவரும் அதன் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விற்பனை தொடர்பாக பொதுமக்களும் தகவல் அளிக்கலாம் அவர்களின் விவரங்கள் ரகசிய காக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் திட்டம்
பிரதீப் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நண்பர்களான லிங்கேஸ்வரன், யோகராஜ், யூசுப், கெவின் மற்றும் ஆட்கள் மூலமாகவும் கொகைனை வாங்கி பயன்படுத்தவும் செய்வார் என்பது பிரதீப்பின் வாக்குமூலம் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்திற்கு மட்டும் 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக ஐடி விங் முன்னாள் மாநில நிர்வாகி பிரசாத்தை இந்த வழக்கில் சேர்த்து கைது செய்வதுடன், காவலில் எடுத்து விசாரிக்கவும் நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் பாரில் தகராறு, வேலை வாங்கி தருவதாக மோசடி என மொத்தம் ஐந்து வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.