தடை விதிக்ககோரி வழக்கு
மல்லபுரத்தை அடுத்த வடநெமிலி என்னுமிடத்தில் மே 11ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பௌர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
பாமகவுக்கு நிபந்தனை
இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பா.ம.க. தலைவர் கூறியிருக்கிறார் எனத்தெரிவித்து, அன்புமணி பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காட்டினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் கடந்த 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
கண்காணிக்க வேண்டும்
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐஜி- யிடம் வழங்க வேண்டும் என பாமக தரப்புக்கு உத்தரவிட்டனர்.மேலும் மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்று நிபந்தனை விதித்த நீதிபதிகள், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாநாடும், சித்ரா பௌர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டனர்.தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
மல்லபுரத்தை அடுத்த வடநெமிலி என்னுமிடத்தில் மே 11ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பௌர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
பாமகவுக்கு நிபந்தனை
இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பா.ம.க. தலைவர் கூறியிருக்கிறார் எனத்தெரிவித்து, அன்புமணி பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காட்டினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் கடந்த 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
கண்காணிக்க வேண்டும்
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐஜி- யிடம் வழங்க வேண்டும் என பாமக தரப்புக்கு உத்தரவிட்டனர்.மேலும் மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்று நிபந்தனை விதித்த நீதிபதிகள், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாநாடும், சித்ரா பௌர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டனர்.தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.