மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதி கன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் உதகை அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும், நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழையும், பந்தலூரில் 8.2 செ.மீ மழையும், சேரங்கோட்டில் 7.9 செ.மீ மழையும், அப்பர் பவானியில் 7.2 செ.மீ மழையும், தேவலாவில் 6.9 செ.மீ மழையும், ஓவேலியில் 4.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் நாளை ஒரு சில இடத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானதும் முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் உதகை அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும், நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழையும், பந்தலூரில் 8.2 செ.மீ மழையும், சேரங்கோட்டில் 7.9 செ.மீ மழையும், அப்பர் பவானியில் 7.2 செ.மீ மழையும், தேவலாவில் 6.9 செ.மீ மழையும், ஓவேலியில் 4.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் நாளை ஒரு சில இடத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானதும் முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.