தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு ஏடிஎம்களில் பணம் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த தீவிர விசாரணையில் வட மாநில இளைஞர் ஒருவர் நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்தது அதன் அடிப்படையில் பணம் வெளியில் வரும் இடத்தில் தகடு ஒன்றை வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
பின்பு ஏடிஎம் கார்டை பயன்படுத்துகின்ற பொதுமக்களுக்கு, பணம் எடுப்பதற்கான அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் ஆனால், பணம் மட்டும் வெளியில் வருவதில்லை. சில நேரங்களில் பணவரவில்லை என்று வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். பின்பு ஏ.டி.எம்க்கு சென்று அந்த மர்ம ஆசாமி அவர் வைத்த தகடை எடுத்ததும் பணம் ஏடிஎம்மில் இருந்து வெளியில் வரும், அதை எடுத்துவிட்டு மீண்டும் தகடை ஏடிஎம்மில் பொருத்திவிட்டு சென்று விடுகிறார் இவ்வாறு பல மாதங்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து வந்த புகாரை அடுத்து ஏடிஎம்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வடமாநில இளைஞரின் கைவரிசை தெரிய வந்தது. மேலும் வட மாநில இளைஞர் நூதன முறையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் அமைந்துள்ள சுமார 30க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இதுவரை தனது கைவரிசையை காட்டியுள்ளார். மேலும் சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், மணலி, மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம் மற்றும் மாங்காடு, மதுரவாயல், பாண்டிச்சேரி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பொது மக்களின் உதவிக்காக மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
பின்பு ஏடிஎம் கார்டை பயன்படுத்துகின்ற பொதுமக்களுக்கு, பணம் எடுப்பதற்கான அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் ஆனால், பணம் மட்டும் வெளியில் வருவதில்லை. சில நேரங்களில் பணவரவில்லை என்று வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். பின்பு ஏ.டி.எம்க்கு சென்று அந்த மர்ம ஆசாமி அவர் வைத்த தகடை எடுத்ததும் பணம் ஏடிஎம்மில் இருந்து வெளியில் வரும், அதை எடுத்துவிட்டு மீண்டும் தகடை ஏடிஎம்மில் பொருத்திவிட்டு சென்று விடுகிறார் இவ்வாறு பல மாதங்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து வந்த புகாரை அடுத்து ஏடிஎம்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வடமாநில இளைஞரின் கைவரிசை தெரிய வந்தது. மேலும் வட மாநில இளைஞர் நூதன முறையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் அமைந்துள்ள சுமார 30க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இதுவரை தனது கைவரிசையை காட்டியுள்ளார். மேலும் சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், மணலி, மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம் மற்றும் மாங்காடு, மதுரவாயல், பாண்டிச்சேரி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பொது மக்களின் உதவிக்காக மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.