தமிழ்நாடு

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்!

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி வழக்கில் 800 கோடிக்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக 7 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், சுமார் ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்!
ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்!
சட்டவிரோத வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை (Forex Trading) மோசடி வழக்கில் மும்பை அமலாக்கதுறை கடந்த 13 ஆம் தேதி அன்று மும்பை, டெல்லி, சென்னை மற்றும் குர்காவ் ஆகிய 4 நகரங்களில் உள்ள 7 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.

இந்த சோதனைகள், OctaFX Trading App மற்றும் அதன் இணையதளம் www.octafx.com வழியாக நடத்தப்பட்ட சட்டவிரோத ஆன்லைன் ஃபாரெக்ஸ் பரிவர்த்தனைகள் தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு, புனேவிலுள்ள சிவாஜிநகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதில், OctaFX என்ற ஆன்லைன் பிளாட்ஃபாமின் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து பொதுமக்களை ஏமாற்றியதாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணையில் OctaFX மற்றும் India Pvt Ltd ஆகியவை, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியின்றி செயல்பட்டதாகவும், ஒரு ஆண்டுக்குள் ரூ.800 கோடிக்குமேல் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

சோதனைகளில், முதலீட்டாளர்களின் பணங்கள் மியுல் எனப்படும் வங்கி கணக்குகள் வழியாக Dinero Payment Services என்ற அங்கீகாரம் பெறாத பேமெண்ட் மூலம் பல கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும், போலியான KYC ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் பெயரில் கடன் பாக்கிகள், ரீபண்ட்கள், விற்பனையாளர் கட்டணங்கள் என்ற பெயரில் போலி தகவல்கள் மூலமாக போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பணப்பரிவர்த்தனையை மறைக்க பல நிலைகளில் பணம் பரிமாறப்பட்டு, பொய்யான தகவல்களில் பணத்தை மாற்றி வெளிநாட்டு பரிவர்த்தனை என காட்டப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. OctaFX நிறுவனத்தால் URL Masking தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் வங்கி மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகளால் அவற்றை கண்காணிக்க முடியாதபடி பரிவர்த்தனை வழிகளை மறைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை, ரூ.160.8 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இரண்டு குற்றப்பத்திரிகைகள் (Prosecution Complaints) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.