தமிழ்நாடு

மாணவியின் கால்களை உடைத்து பாலியல் தொல்லை...உண்மையை ஒப்புக்கொண்ட காவலாளி

சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்ற காவலாளி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 மாணவியின் கால்களை உடைத்து பாலியல் தொல்லை...உண்மையை ஒப்புக்கொண்ட காவலாளி
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது
சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறுமி சேவை இல்லத்தில் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியை மூடி தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார்.

அப்போது மாணவி அவரிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த நபர் மாணவியை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு இரும்பு ராடால் காலில் தாக்கியபோது கால் முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

காலில் எலும்பு முறிவு

இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் மகளிர் விடுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்,

மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுச்சுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலையில் முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் போலீசார் அரசு சேவை இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த மேத்யூ (50) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.

காவலாளி கைது

விசாரணையில் காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியை விசாரணை நடத்தினர். விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து உள்ளார். அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 14 வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும், மேலும் பாதிப்புக்கு உள்ளான மாணவி ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் இவர் வெளியில் எதையும் சொல்லமாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தராவில் காவலாளி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து மேத்யூ மீது சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல் நிலையத்திலிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது செய்தியாளர்கள் வீடியோவாக பதிவு செய்யவும்போது வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது என கூறி மேத்தியூவின் மகன் செய்தியாளரை தாக்கினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை முடிக்கப்பட்டு நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதே போன்று வேறு எந்த மாணவியிடமாவது இவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரசு சேவை இல்லத்தில் தங்கி உள்ள மற்ற மாணவிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,

இது சம்பந்தமாக விடுதியின் கண்காணிப்பாளர் ரேவதி பதிலளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தான் பணிக்கு வந்து 9 மாதம் காலம்தான் ஆகிறது என்றும், 2011ஆம் ஆண்டு முதல் மேத்யூ விடுதியில் பணிபுரிந்து வருவதாகவும், பாப்பா கீழே விழுந்து விட்டுதாகவும் ரத்தம் போக்கு அதிகமாக இருந்தாகவும், அதனால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார்.
குற்றம் சாட்ட மேத்யூ நல்லவர் என்றும் வெளியே இருந்து யாராவது வந்தார்களா என கேட்டபோது தெரியாது என மீண்டும் பதில் அளித்தார்.குழந்தையை எதற்கு உங்களை நம்பி இங்கு அனுப்பி வைக்கிறோம் என கேட்டபோது, சார் நேற்று முதல் சாப்பிடவில்லை விட்டால் மயங்கி விழுந்துவிடுவேன் என திணறி பதில் அளித்தார்.

இது குறித்து மேத்யூ உறவினர்கள் கூறும்பொழுது, ஒரு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் இரவு பகலாக வேலை பார்ப்பதாக தெரிவித்தனர்.