தமிழ்நாடு

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி உள்ளிட்ட திமுகவினர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய டி.ஆர்.பாலு, பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணும் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையும், அதனை தொடந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வெற்றிப் பெற்றதை வரவேற்கிறோம், ஆனால் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

முப்படை தளபதி ஒரு ரபேல் விமானம் சுடப்பட்டதாக கூறுகிறார். ஆனால், தலைமை அமைச்சர் உண்மையை மறைக்கும் அரிச்சந்திரன், மோசமான மனிதராக செயல்படுகிறார். அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்ல முன்வந்தாலும் சொல்லவிடமாட்டார். ராணுவ நடவடிக்கையை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதி கூடும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் அல்லது மக்கள் பிரிதி நிதியாக நாங்கள் மக்களுக்கு பதில் சொல்லமுடியாது போகும் என்றார்,

சிந்தூர் நடவடிக்கையில் வெற்றிப்பெற்றது. ராணுவம் ஆனால் தன் முதுகில் தானே தட்டிக்கொள்கிறார். பாஜக ஆட்சியாளர்கள், உங்களுக்கு சொந்தம் இல்லை நீங்கள் பெற்ற பிள்ளையில்லை ராணுவம் பெற்ற பிள்ளை தான் சிந்தூர் ராணுவ நடவடிக்கை என டி.ஆர்.பாலு பேசினார்.