Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை மாநகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோலில் பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பணியை மேற்கொண்டு வரும் தலைமை குருக்களை என்ன புரோக்கர் வேலை செய்கிறீர்களா என்று கேட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் கோவிலில் தலைமை குருக்களை பார்த்து புரோக்கர் என்று கேட்டதால் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளையும் நிறுத்திவிட்டு சிவாச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் யாகசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.