தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
நோயாளிகளிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் இடையே வாக்குவாதம்.
மருத்துவமனையில் மருந்து கட்டும் இடத்தில் ஊழியர்கள் இருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குவதாக புகார்.
புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.