போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
வீடியோ ஸ்டோரி
ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு.., உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வழக்கு இன்று வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.