ஜி7 (G7) நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் உலக அளவில் முக்கிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றம், மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொல்லா போன்ற அமைப்புகளுடன் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பாராத தாக்குதல்களை தொடர்ந்து, ஜி7 நாடுகள் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் இதுவரை பார்த்திராத வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, அந்த நாட்டுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்பது குறித்த ஆதரவையும், அதனை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்பதையும் ஜி7 கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், "ஈரானின் தீவிர செயற்பாடுகள் உலக அமைதிக்கே ஒரு சவாலாக உள்ளன. அத்துடன், அந்த நாட்டின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழுமையான உரிமை உண்டு" என கூட்டறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி7 நாடுகளில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த நாடுகள் அனைத்தும் கருத்தை பொதுவாக ஏற்றுக்கொண்டு, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் உயிரிழப்பு அல்லது பொதுமக்கள் மீது தாக்குதல் நிகழக்கூடாது என்பதையும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதையும் ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் மத்திய கிழக்கில் ஈரான் பதற்றத்தை ஏற்படுத்துவது விரோதத்திற்கு வழிவகுக்கும் என G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை மறுபடியும் வலியுறுத்த விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது என்று அந்த அறிக்கை வெளியிட்ட நிலையில், மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் G7 நாடுகள் தெளிவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவு, இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் ஒரு நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் இதுவரை பார்த்திராத வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, அந்த நாட்டுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்பது குறித்த ஆதரவையும், அதனை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்பதையும் ஜி7 கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், "ஈரானின் தீவிர செயற்பாடுகள் உலக அமைதிக்கே ஒரு சவாலாக உள்ளன. அத்துடன், அந்த நாட்டின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழுமையான உரிமை உண்டு" என கூட்டறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி7 நாடுகளில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த நாடுகள் அனைத்தும் கருத்தை பொதுவாக ஏற்றுக்கொண்டு, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் உயிரிழப்பு அல்லது பொதுமக்கள் மீது தாக்குதல் நிகழக்கூடாது என்பதையும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதையும் ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் மத்திய கிழக்கில் ஈரான் பதற்றத்தை ஏற்படுத்துவது விரோதத்திற்கு வழிவகுக்கும் என G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை மறுபடியும் வலியுறுத்த விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது என்று அந்த அறிக்கை வெளியிட்ட நிலையில், மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் G7 நாடுகள் தெளிவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவு, இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் ஒரு நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.